June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென் மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடமாட்டம்; மத்திய மந்திரி தகவல்

1 min read

I.S. The movement of extremists; Central Minister told

16-9-2020

தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள்

டெல்லி பாராளுமன்ற மேல் சபையில் இந்தியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடமாற்றம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறிய பதில் வருமாறு:-

தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

தமிழகம்

தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, 122 பேரை கைது செய்துள்ளது.

தென்மாநிலங்களைத் தவிர மராட்டியம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு- காஷ்மீரிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.