மாணவர்கள் தற்கொலைக்கு தமிழக அரசுதான் காரணம்”- மு.க.ஸ்டாலின்
1 min read
The Tamil Nadu government is responsible for the suicide of students “- MK Stalin
15-9-2020
நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக அரசுதான் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க.வின் முப்பெரும் விழா
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் முப்பெரும் விழா பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் சுா. ராஜகோபாலுக்கு பேராசிரியர் விருது வழங்கி சிறப்பித்தார்.
அ.தமிழரசிக்கு பாவேந்தர் விருது வழங்கி சிறப்பித்தார். எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்தார். அ. ராமசாமிக்கு அண்ணா விருது வழங்கி சிறப்பித்தார். மா. மீனாட்சிசுந்தரத்திற்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.அவர் பேசியதாவது:-
தமிழக அரசுதான்
நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக அரசுதான். இதை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வெட்டி வா என்றால் கட்டி வருபவர்கள் திமுகவினர். நாடே சொல்கிறது, நாட்டு மக்களே சொல்கிறார்கள். 7 மாதத்தில் திமுக ஆட்சிதான்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.