July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

“ரெயில்வே துறையை தனியார் மயமாக்கம் திட்டம் இல்லை”- மத்திய மந்திரி உறுதி

1 min read

“There is no plan to privatize the railway sector” – confirmed the Union Minister

16-9-2020

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதியளித்தார்.

தனியார் மயம்

பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அளித்த பதில் வருமாறு:-
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. 2030ம் ஆண்டு வரை ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவது, மேம்படுத்துவது, நவீனப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி தேவைபடுகிறது.

இந்த நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவும், பயணிகளுக்கு தரமான ரெயில், சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க, சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் பப்ளிக் மற்றும் பிரைவேட் பாட்னர்ஷிப்(PPP) திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் நவீன அம்சங்கள் உள்ள ரெயில்களை இயக்குவது இதில் அடங்கும்.
இவ்வாறு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

தூத்துக்குடி

அதேபோல் தூத்துக்குடி – தாதன்குளம் ரெயில் நிலையம் மூடுப்படாது என்றும் பியூஷ் கோயல் தெளிவு படுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி கேட்ட கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தாார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.