June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நாளை மகாளய அமாவாசை – வீட்டில் இருந்தே தர்ப்பணம் செய்யலாம்?

1 min read

Tomorrow is the Mahalaya Amavadai – you can pray at home?

கட்டுரையாளர்- மதுரை மங்கள மைந்தன்

——-

16-9-2020
அமாவாசைகளில் மகாளய அமாவாசை மிகவும் சிறந்தது. கடந்த 14 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த அமாவாசைக்கு மறுநாள் முதல் மகாளய பட்சம் தொடங்கியது. அன்று முதல் மகளாய அமாவாசை வரை இறந்த நம் முன்னோர்கள் வீடு தேடி வருவதாக ஐதீகம். எனவே அன்று முதல் நாளை வரை தினமும் வீட்டை சுத்தமாக வைத்திருந்து இறந்தவர்களை நினைத்து வழிபடவ வேண்டும். இறந்தவர்களின் திதி இந்த 15 நாட்களில் என்று வருகிறதோ அன்று அவர்களுக்கு பிடித்தமான பண்டம் பதார்த்தங்களை படைத்து வணங்கலாம்.

மகாளய காலமான 15 நாட்கள் தாம்பத்தியம் செய்யக்கூடாது; காமரீதியான நடவடிக்கைகளை கட்டாயம் நிறுத்திட வேண்டும். இது நமது முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை ஆகும்.

சரி … கடந்த 14 நாட்கள் இதைப்பற்றி நினைக்காவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் நாளை( வியாழக்கிழமை) வரும் மகாளய அமாவாசை அன்று மறைந்த பெரியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை திருப்பதி அடையச் செய்யலாம்.

பொதுவாக தர்ப்பணம் செய்ய ஆறு, கடல் போன்ற நீ்ர் நிலைகளுக்கு செல்வது நல்லது. ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் நீர் நிலைகளுக்கு செல்வது என்பது முடியாத காரியம். ராமேசுவரம் போன்ற புண்ணியத் தலங்களுக்கு சென்றாலும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

எனேவ இந்த அமாவாசை தர்ப்பணத்தை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வீட்டிற்கு புரோகிதரை வரவழைத்து செய்யலாம். அப்படி முடியாதர்கள் தங்களாகவே தனியாக தங்களுக்கு தெரிந்த அளவு தர்ப்பணம் செய்தால் போதும்.
நாளை மறைந்த முதியவர்களை வழிபட்ட பின்னர்தான் மற்ற காரியங்களை செய்ய வேண்டும். சூரியன் உதித்த பிறகுதான் தர்ப்பணம் அல்லது மறைந்தவர்கள் வழிபாட்டை நடத்த வேண்டும். குறிப்பாக குளித்து முடித்தவுடன் அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். வீட்டில் முற்றம் தெளித்து கோலம் போடக்கூடாது. தீபம் ஏற்றக்கூடாது. தர்ப்பணம் முடிந்த பிறகுதான் இதை எல்லாம் செய்ய வேண்டும்.
இந்த நாளில் தானிய வகைகள், கரும்பு, அன்னம்(சோறு), பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும்.
புளியங்குடி சிவமாரியப்பன் ஐயா அவர்களின் ஆய்வு முடிவுப்படி,ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.
என்று கூறப்படுகிறது.

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.

அங்கிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது. மகாளய அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது.நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும்.மனைவியின் அனுமதியை தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த ஆண்கள் பெற வேண்டும். அப்பொழுதுதான் தர்ப்பண நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். மகரிஷிகள்,சித்தர்களின் ஆசி கைகூடும்.பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்.

புரோகிதரை அழைக்க முடியவில்லை… ஆனால் சம்பிரதாய காரியங்கள் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள்… தங்கள் வீட்டில் அரசி, பருப்பு, வாழைக்காய் போன்ற காய்கறிகள் ஆகியவற்றையும் பண்டம் பதார்ந்தங்களையும் படைத்து மறைந்த பெரியவர்களை வணங்கி அதை புரோகிதர்களுக்கோ, பண்டாரங்களுக்கோ தானம் கொடுக்கலாம். முடிந்த அளவு காணிக்கை வைத்து கொடுக்க வேண்டும்.
மகாளய அமாவாசை நாளில் அரிசி,கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, மைதா, கனிகள், சாத வகைகள், உலர்ந்த கனிகள், ஆடைகள், பாதணிகள், ஆபரணங்கள் தானம் அளிக்கலாம். வசதியுள்ளவர்கள் ராமேஸ்வரம் முதலான சிவாலயங்களில் செய்யலாம். சராசரி மக்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் எந்தக்கோவில் வாசலிலும் தானம் செய்யலாம். அயல்நாடுகளில் இருப்போர் அனாதை இல்லங்களில் செய்யலாம்.

இது எதுவும் முடியாதவர்கள், நமது ஊரில் அல்லது நமது வீட்டின் அருகில் அல்லது நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும்) அளிக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் மறைந்த முன்னோர்கள் திருப்பதி அடைந்து நம்மை வாழ்த்திவிட்டு செல்வார்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.