June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா; 5,524 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 5,560 people one day in Tamil Nadu; 5,524 discharged

17-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 5,524 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வியாழக்கிழமை ) வெளியிட்ட விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,555 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 174 ஆய்வகங்களில் 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 62 லட்சத்து 17 ஆயிரத்து 923 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,319 பேர் ஆண்கள். 2,241 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,16,646. பெண்களின் எண்ணிக்கை 2,08,745. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,524 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக உள்ளது.

59 பேர் சாவு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 59 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 36 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,610 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

சென்னையில்….

சென்னையில் மட்டும் இன்று 992 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையைத் தவிர கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 239 பேருக்கும், கடலூரில் 206 பேருக்கும், திருப்பூரில் 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும், திருவண்ணாமலையில் 169 பேருக்கும், தஞ்சாவூரில் 155 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 95 பேருக்கும்,தென்காசி மாவட்டத்தில் 70 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 80 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.

சென்னையில் இன்று 12 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கடலூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், கோவை, காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று 956 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருகிறார்கள். திருவள்ளூரில் 518 பேரும், கோவையில் 364 பேரும், கடலூரில் 296 பேரும், செங்கல்பட்டில் 256 பேரும், வேலூரில் 245 பேரும், சேலத்தில் 242 பேரும், கன்னியாகுமரியில் 200 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.