இஸ்ரேலில் மீண்டும் கொரோனா பரவல்; ஊரடங்கு அறிவிப்பு
1 min read
Corona spread again in Israel; Curfew notice
18-9-2020
இஸ்ரேல் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் அந்த நாட்டில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்குஅறிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல்
சீனாவில் உருவான கொரோனா பல நாடுகளை படாய் படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு பெரும் இழப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்று இஸ்ரேல்.
அந்த நாட்டில் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த மே மாதம் கொரோனா கட்டுக்குள் வந்தது. தினமும் ஒற்றை எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர்.
ஊரடங்கு
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,800 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,79,071 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஒரே நாளில் அங்கு 27 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,196 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள..
இதனால், தளர்வுகள் அற்ற ஊரடங்கினை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
யூதர்களின் வருடப்பிறப்பு அடுத்த வாரம் முதல் வருகிறது. இதேபோல் பல திருவிழாக்கள் வருவதால் 3 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு 500 மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுகூறும்போது, “‘ கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு தேவையான ஒன்றாகிவிட்டது. ” என்றார்.