June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புதுவை பல்கலைக்கழகத்தில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி

1 min read

Permission to look at the book and write the exam at the Puvai University

18-9-2020

கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுவை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

கல்லூரி தேர்வு

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. விண்ணப்பித்தவர்கள் அனைரும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தேர்வு தேதிகளை அறிவித்து வருகின்றன..

இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புத்தகத்தை பார்த்து…

புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிறஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது.
கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதில் அளிக்க இந்தமுறை வழிவகை செய்யும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள்.

கறுப்பு மை

தேர்வுகளின் காலம் மற்றும் பிற நிபந்தனைகளும், வினாத்தாள்களின் முறை ஆகியவை ஏற்கனவே முன்பு இருந்த படியே இருக்கும். மாணவர்கள் ‛ஏ4′ வெள்ளைத் தாளில் கறுப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும். தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். 2ம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.