June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான தாக்குதலில் 30 அப்பாவிகள் சாவு

1 min read

30 innocent people have been killed in a terrorist attack in Afghanistan

19-9-2020

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 30 பேர் இறந்தனர்.

தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும் தாலிபான் படையினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெறும். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தின் கனாபாத் மாவட்டத்தில் ஒரு விமானப்படை தாக்குதல் நடந்தது.

30 பேர் சாவு


அப்போது, அந்த பகுதியில் பொது மக்கள் கூடியிருந்தனர். இதனால், தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

மற்றொருவர் கூறுகையில், “விமான படை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 அப்பாவிகள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 7 தலிபான் பயங்கரவாதிகளும் இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர்” என்றார்.

கனாபாத் மாவட்ட தலைவரும், விமானப்படை தாக்குதலை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், இந்த தாக்குதலை யார் நடத்தியது உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.