June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சவுதியில் 450 இந்தியர்கள் பிச்சை எடுத்ததால் பரபரப்பு

1 min read

450 Indians beg in Saudi Arabia

19-9-2020

சவுதியில் உள்ள இந்தியர்கள் கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்து உள்ளனர். இதனால் 450 இந்தியர்கள் அங்கு பிச்சை எடுத்தனர்.அவர்கைள அதிகாரிகள் பிடித்து முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.

சவுதியில் இந்தியர்கள்

இந்தியர்கள் வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இந்த கொரோனா பரவல் காரணமாக பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பலர் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். பலர் வர முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் சவுதியில் உள்ள இந்தியர்கள் 450 பேர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்ததாலும், அங்கு தங்கி இருக்க வேண்டிய காலஅவகாசம் முடிந்துவிட்டதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தடுப்பு முகாம்

அவர்கள் பிச்சை எடுப்பதை அறிந்த அதிகாரிகள் அவர்களை பிடித்து தடுப்பு முகாமில் அடைத்னதர்.
தடுப்பு முகாமில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 39 பேர், பிகாரைச் சேர்ந்த 10 பேர், தெலுங்கானாவைச் சேர்ந்த 5 பேர், மராட்டியம், காஷ்மீர், கர்நாடகாவை சேர்ந்த தலா 4 பேர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்கள் கர்நாடகா, அரியானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, வாடகை அறைகளில் தங்கியிருந்த அவர்களை கைது செய்த அதிகாரிகள், ஜெட்டாவில் உள்ள ஷமைசி தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர் .

“நாங்கள் நம்பிக்கையில்லாத சூழ்நிலையில் உள்ளோம். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. எங்களது வேலையை இழந்துவிட்டதால், பிச்சையெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால், தற்போது தடுப்புமுகாமில் வேதனையுடன் உள்ளோம்.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.