நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in Nellai, Tenkasi and Thoothukudi
19-9-2020
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை
கொரோனா பரவல் பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன் படி, நெல்லை மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11729 ஆக அதிகரித்தது.
இன்று மட்டும் 115 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் 10493 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 1041 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரேனாவுக்கு இறந்துள்ளனர். இதனால்கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6703 ஆக உயர்ந்துள்ளது. இன்று 95 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 6037 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது மா 542 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் இந்த மாவட்டத்திலர் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12775 ஆக உயர்ந்துள்ளது. இன்று 94 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 11886 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்கள். தற்போது மொத்தம் 770 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் இன்று கொரோனாவுகு சாவு இல்லை என்பதால், மாெத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.
கோவை
கோவையில் 562 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், சேலத்தில் 286 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.