கபசுரக் குடிநீர் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும்- விஞ்ஞானிகள் உறுதி
1 min read
Controlling the spread of the virus in Kabha sura kudineer – scientists confirm
20-9-2020
சித்த வைத்தியர்கள் பரிந்துரைக்கும் கபசுர குடிநீருக்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அறிந்துள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறினார். மேலும் 16,563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கபசுர குடிநீர்
மதுரை தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யான வெங்கடேசன், பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வஅர் “கொரோனா சிகிச்சையில் மத்திய ஆயுஷ் துறை எடுக்கும் ஆய்வு நடவடிக்கைகள் என்ன? பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள், கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்கும் மற்றும் அலோபதி – ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சைகளின் மேலாய்வின் நிலை என்ன?’ என பல்வேறுகேள்விகளை எழுப்பினார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு:-
23 சென்டர்கள்
தமிழ்நாட்டில் மட்டும் 29 சித்த மருத்துவ ‘கோவிட் கேர் சென்டர்’கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 16,563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். ஏறத்தாழ 120 மெட்ரிக் டன் அளவிலான கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழுவீச்சில் இயங்கி வருகின்றன.
ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம் முதலான மருந்துகள் கொரோனா நோயில் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
3 கோடி மக்கள்
சுமார் 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடிநீரும் நில வேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளன. அந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம், சித்த மருந்தான கபசுரக் குடிநீருக்கு, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய மந்திரி கூறினார்.