June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா; 5,206 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 5,516 people in one day in Tamil Nadu; 5,206 discharged

20—/-9/ -2020

தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 5,206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உ்ளளது. இதில், 5,514 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும்174 ஆய்வகங்களில் 86,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 64 லட்சத்து 74 ஆயிரத்து 656 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,409 பேர் ஆண்கள். 2,107 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,26,699. கொரோனா பாதித்த மொத்த பெண்களின் எண்ணிக்கை 2,15,264. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 .

இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 5,206 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 ஆக உள்ளது.

60 பேர் சாவு

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் இறந்துள்ளனர். இதில்
சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், கோவை, சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், கடலூர், ஈரோடில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூரில் தலா 2 பேரும், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 996 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையைத் தவிர இன்று கோவையில் 568 பேருக்கும், கடலூரில் 297 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், திருப்பூரில் 169 பேருக்கும், தஞ்சாவூரில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும், ஈரோடில் 148 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 92 பேருக்கும் தென்காசி மவட்டத்தில் 87 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 82 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 1,263 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,42,875 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவையில் 488 பேரும், சேலத்தில் 259 பேரும், கடலூரில் 248 பேரும், கள்ளக்குறிச்சியில் 204 பேரும், கன்னியாகுமரியில் 155 பேரும், வேலூரில் 150 பேரும், திருவள்ளூரில் 149 பேரும், நாகப்பட்டினத்தில் 140 பேரும், காஞ்சிபுரம், மதுரையில் தலா 135 பேரும், திருப்பூரில் 124 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.