மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
1 min read
Policeman suspended for beating ricsha worker
20-/9/-2020
மாற்றுத்திறினாளியான ரிக்ஷா ஓட்டுபவரை அடித்து உதைத்த போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மாற்றுத் திறனாளி
உத்தரபிரதேச மாநிலம் கனூஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த மாற்றுத்திறனாளி அனுமதிக்கப்படாத சாலையோரம் ரிக்ஷாவை நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார். இதனைப் பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அந்த தொழிலாளியை இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளார். மேலும் தண்டால் எடுக்கவும் செய்துள்ளார்.
சஸ்பெண்டு
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை அடுத்து கனூஜ் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அமேந்திர பிரதாப் சிங் மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
அவர்கூறும்போது போலீசார் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதேநேரம் சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் கூறும்போது, அந்த ரிக்ஷா தொழிலாளி மீதுதான் தவறு உள்ளது. அவர் தவறாக நடந்ததால்தான் அடித்தேன் என்றார்.