இந்திய கடற்படையில் முதன் முறையாக 2 பெண் அதிகாரிகள்
1 min read
2 female officers for the first time in the Indian Navy
21/9/2020
இந்திய கடற்படையில் முதன்முறையாக
2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண் அதிகாரிகள்
ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் நியமித்து வருகிறார்கள். பல பெண்கள் அதிகாரிகளாகவும் உள்ளனர்.
இந்தியாவில் முதலில் விமானப் படையில் போர் தளவாடங்களை பெண்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. 2016 -ம் ஆண்டு விமான லெப்டினன்ட் பவன்னா காந்த், விமான லெப்டினன்ட் அவனி சதுர்வேதி, மற்றும் விமான லெப்டினன்ட் மோகனா சிங் ஆகிய பெண்கள் முதலில் போர் விமானிகளானார்கள்.
கடற்படை
இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். இப்போது இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக இந்திய போர் கப்பல்களில் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்த 2 பெண் அதிகாரிகளும், எம்.ஆர்.எச்.எனப்படும் கடற்படை மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களில் சோனார் கன்சோல்கள், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பேலோடுகள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை இயக்க, இந்த பெண் அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர். இப் பயிற்சிக்கு பின் கடற் படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள்” என்றார்.