June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

1 min read

In Tamil Nadu, 5,492 people recovered from Corona today

21-/9/-2020

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் குணமானார்கள்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் தொடர்கிறது. கொரோானா நிலவரம் குறித்து தினமும் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( திங்கட்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 5,341 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 174 ஆய்வகங்களில் 80,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 65 லட்சத்து 55 ஆயிரத்து 328 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,260 பேர் ஆண்கள். 2,084 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,29,959. கொரோனா பாதித்த மொத்த பெண்களின் எண்ணிக்கை 2,17,348. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 .

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,492 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 60 பேர் இறந்துள்ளனர். இதில் 31 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 29 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 46,495 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்…

சென்னையில் மட்டும் இன்று 982 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையைத் தவிர இன்று கோவையில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், ஈரோடில் 201 பேருக்கும், திருப்பூரில் 161 பேருக்கும், கடலூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 136 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 117 பேருக்கும், கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.

சென்னையில் கொரோனாவுக்கு 16 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 6 பேரும், காஞ்சிபுரம், தஞ்சாவூர்,வேலுார்,தேனியில் தலா 4 பேரும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், திருச்சி, ஈரோடில் தலா 2 பேரும், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலுார்,திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருவாரூர், விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று 805 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,43,680 பேர்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கோவையில் 531 பேரும், திருப்பூரில் 374 பேரும், சேலத்தில் 361 பேரும், கடலூரில் 255 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், நாமக்கல்லில் 192 பேரும், திருவள்ளூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 171 பேரும், நாகப்பட்டினத்தில் 149 பேரும், வேலூரில் 123 பேரும், கள்ளக்குறிச்சியில் 109 பேரும், கன்னியாகுமரியில் 103 பேரும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.