தமிழகத்தில் புதிய ரெயில் பாதை பணிகள் நிறுத்தம்
1 min read
New railway line halted in Tamil Nadu
21/9/2020
தமிழகத்தில் தற்காலிகமாக ரெயில் பாதைகள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ரெயிபாதை பணிகள்
பாராளுமன்ற கூட்டத் தொடரில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு எழுப்பிய கேள்விக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரெயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது.
புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி கூறினார்.