அமெரிக்காவிடம் இருந்து ரூ.2,290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு
1 min read
Decided to buy modern weapons from the US for Rs 2,290 crore
29/9/2020
ராணுவத்துக்கு ரூ.2,290 கோடியில் நவீன ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.
நவீன ஆயுதங்கள்
டெல்லியில் நேற்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.