தமிழகத்தில் இன்று 5,524 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min read
In Tamil Nadu, 5,524 people recovered from Corona today
7/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 524 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( புதன்கிழமை) மட்டும் 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5 ஆயிரத்து 524 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.
67 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 67 பேர் இறந்தள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்த 984 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 45,279 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரையில் 1,76,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 4,078 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.