சென்னை-கன்னியாகுமரி இடையே நீர்வழிபோக்குவரத்து விரைவில் தொடக்கம்
1 min read
Chennai-Kanyakumari waterway will start soon
8/10/2020
சென்னை-கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
மேம்பாலம்
புதுச்சேரியில் 35 கோடி ரூபாய் செலவில் 1 கி.மீ. நீள மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதனை நேற்று (புதன் கிழமை) மாலை காணொளி மூலம் மத்திய மந்திரி திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது அவர்பேசியதாவது:-
நாட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கடலிலும் ஆகாயத்திலும் செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.
நீர்வழி போக்குவரத்து
அதேபோல் விரைவில் சென்னை-புதுச்சேரி-கன்னியாகுமரி இடையேயும் நீர்வழி போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தின் முக்கிய நகரங்களை வடமாநிலங்களின் நகரங்களை நீர்வழிப் போக்குவரத்து மூலம் இணைக்கு மத்திய அரசு உதவும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.