June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தங்க கடத்தல் வழக்கு குற்றப்பத்திரிகையில் கேரள முதல்-மந்திரி பெயர்

1 min read

Name of the First Minister of Kerala in the Gold Smuggling Case Charge

8/10/ 2020

தங்கம் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஸ்வப்னா சுரேஷ் நியமனம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியும் என ஸ்வப்னா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல்

திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ. தூதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில், தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று ( புதன்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

முதல் மந்திரி

வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2019 நவம்பரில் கேரள அரசின் ‘ஸ்பேஸ் பார்க்’ திட்டத்தில் சேர்ந்துள்ளார். தனது நியமனம் பற்றி கேரள முதல்-மந்திரிக்குத் தெரியும் என ஸ்வப்னா கூறியுள்ளார்.
முதல்-மந்திரியின் முதன்மைச் செயலர் சிவசங்கரை அலுவல்ரீதியாக ஸ்வப்னா 8 முறையும், அலுவல்ரீதியாக அல்லாமல் பல முறையும் சந்தித்துள்ளார். முதல்-மந்திரி உடனிருக்கும் போதும் சிவசங்கரை ஸ்வப்னா சந்தித்துள்ளார்.
‘ஸ்பேஸ் பார்க்’ நியமனத்தின் போது, முதல்-மந்திரியிடம் பேசி நியமனத்தை உறுதி செய்வதாக ஸ்வப்னாவிடம் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். ஸ்பேஸ் பார்க்கில் 2 அதிகாரிகளை சந்தித்து தனது பொறுப்புகளை தெரிந்து கொள்ளும்படி ஸ்வப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார். இதையடுத்து பணியில் சேரும்படி ஸ்வப்னாவுக்கு அழைப்பு வந்துள்ளது.

வாட்ஸ் அப் ஆதாரம்

நிரந்தர வைப்புத் தொகையாக ஸ்வப்னா ரூ.35 லட்சம் டெபாசிட் செய்ய உதவும்படி பட்டய கணக்காளர் வேணுகோபாலிடம் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் அத்தொகையை பாதுகாக்க, ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டு வங்கி லாக்கரை வேணுகோபால் தொடங்கியுள்ளார். நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிவசங்கர் – வேணுகோபால் இடையிலான வாட்ஸ்ஆப் உரையாடல் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பதில் அளிக்கவில்லை.
இந்த வழக்கில் சிவசங்கரின் பங்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

====
லக்னோ: உ.பி.,யின் ஹத்ராஸ் நகரில் 19 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடித்து கொன்றுவிட்டதாக , இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, மாநில அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் தாக்கூர் என்பவரை, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர். அதில், சந்தீப் தாக்கூரும், இளம்பெண் சகோதரரும் தொலைபேசியில் பேசி கொண்டதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் வரை 109 முறை இருவரும் பேசி கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஹத்ராஸ் போலீசுக்கு சிறையில் இருந்தபடியே சந்தீப் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 பேரும் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.

ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் சந்தீப் தாக்கூர் கூறியுள்ளதாவது:
நானும், இளம்பெண்ணும் நண்பர்கள். நேரில் சந்தித்து கொள்வது மட்டுமல்லாமல், தொலைபேசி மூலமும் தினமும் பேசிக்கொள்வோம். ஆனால், எங்களது நட்பு, அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இளம்பெண் கொல்லப்பட்ட நாளன்று, வயலில் இருந்த அவரை சந்திக்க சென்றேன். அப்போது தாயாரும், சகோதரரும் அங்கு இருந்தனர். இதனால், என்னை திரும்பி செல்லும்படி அவர் கூறியதால், திரும்பி வந்துவிட்டேன்.

வீட்டில் கால்நடைகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்த போது, எங்களது நட்பை பிடிக்காத தாயாரும், சகோதரரும், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணை நான் தாக்கியதும் இல்லை. தவறாக நடந்து கொண்டதும் இல்லை. இளம்பெண்ணின் தாயாரும், சகோதரரும் தவறாக எங்கள் மீது தவறாக குற்றம்சுமத்தி சிறைக்கு அனுப்பியுள்ளார். நாங்கள் அப்பாவிகள். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.