மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மரணம்
1 min read
Union Minister Ramvilas Baswan passes away
8/10/2020
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
ராம் விலாஸ் பஸ்வான்
ஜனசக்தி கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். இவரது மாநிலமான பீகாரில் இக்கட்சிக்கு செல்வாக்கு உண்டு.
தற்போது பிரதமர் மோடியின் மந்திரிசபையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக இருந்து வந்தார்.
கடந்த ஒரு மாதமாக ராம்விலாஸ் பஸ்வான் உடல் நிலைபாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) திடீரென மரணம் அடைந்தார். இதனை அவரது மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மரணம் அடைந்த ராம் விலாஸ் பஸ்வானுக்கு தற்போது வயது 74. இவர் 1946-ம் ஆண்டு பீகாரின் ககாரியா மாவட்டத்தில் பிறந்தார். இவர் 8 முறை எம்.பி.யாக இருந்தார். 2000-ம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கி தற்போது வரை அதன் தலைவராக இருந்து வருகிறார்.
பிரதமர் இரங்கல
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு அவரது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.