தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்த டி.ஜி.பி.க்கு ஏமாற்றம்
1 min read
Disappointment for DGP who resigned to contest the election
8/10/2020
பீகார் தேர்தலில் போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்த டி.ஜி.பி. டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார்.
டி.ஜி.பி.
பீகார் மாநில டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர் குப்தேஸ்வர் பாண்டே. இவர் அங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்து ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்போ பதவியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் பக்சார் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார்.
ஏமாற்றம்
ஆனால் தொகுதிப்பங்கீட்டில் இந்தத் தொகுதி கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பதவி விலகிய டி.ஜி.பி. குப்தேஸ்வர் பாண்டே ஏமாற்றம் அடைந்தார்.
அந்த தொகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் காரர் பரசுராம் சதுர்வேதி என்பவர் பாஜக சார்பில் பக்சார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.