June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே லாரி மோதி வியாபாரி பலி

1 min read

Trader killed in lorry collision near Tenkasi

11/10/2020
தென்காசி அருகே லாரி மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி ஒருவர் இறந்தார்.

விபத்து

தென்காசி அருகே குற்றாலம் ஐந்தருவி பகுதியிலிருந்து ஒருவர் தனது மோட்டார் சைக்களில் கடையநல்லூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது சிவராமப்பேட்டை அருகே வரும் போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வியாபாரி

இதுபற்றி ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கடையநல்லூர் மெயின் ரோடு நடுப்பேட்டை தெருவை சேர்ந்த முகைதீன் பிச்சை என்பவரது மகன் முகைதீன் சலீம் (வயது38) என்பதும், இவர் பால் மற்றும் தேங்காய் வியாபாரம் பார்த்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

இவரது மனைவி ஐந்தருவியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் பள்ளி வளாகத்திலேயே உள்ள ஆசிரியர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் முகைதீன் சலீம் கடையநல்லூரில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக கடையநல்லூர் நோக்கி வந்துள்ளார். அப்போது சிவராம பேட்டை பகுதியில் வந்த போது எதிரே வந்த சிமெண்ட் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.