தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த மாணவன் கைது
1 min read
12 th Student arrested for sexually threatening Dhoni’s daughter
தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த மாணவன் கைது
12/10/2020
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த மாணவன் கைது செய்யப்பட்டான்.
மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்படன் தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அதிர்ச்சி கரமான ஒரு தகவல் வந்தது. அதை பதிவிட்டவன் தோனியின் 5 வயது மகளான ஜீவாவை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளான்.
தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடவில்லை. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தோனி மீது கோபம் கொண்ட ரசிகர் ஒருவர், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார்.
இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
12-ம் வகுப்பு மாணவன்
இந்த நிலையில், மிரட்டல் விடுத்தது யார் என்று தெரியவந்தது. அவர் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவான். கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த அவனை போலீசார் கைது செய்தனர்.
அந்த மாணவனும், தான் பதிவிட்டதை ஒப்புக்கொண்டான்.
இதுகுறித்து கட்ச் போலீஸ் சூப்பிரண்டு சவ்ரப் சிங் கூறும்போது, ” நாங்கள் ராஞ்சி போலீஸ் வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.அவர்கள் வந்த பிறகு மாணவனை அவர்களிடம் ஒப்படைப்போம்” என்றுகூறினார்.
பாலியல் மிரட்டல் விடுத்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.