June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கல்லூரி விடுதிக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம் – 4 மாணவர்கள் கைது

1 min read

4 students arrested for raping girl inside college hostel

12/10/2020

கல்லூரி விடுதிக்குள் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கல்லூரி விடுதி

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதியும் உண்டு. அந்த விடுதியில் மாணவர்கள் சிலர் தங்கியுள்ளனர்.

தற்போது இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) சிவில் சர்விஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் எந்த ஒரு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படாமல் இருந்தது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

அந்த விடுதியில் தங்கியிருந்த தனது நண்பனை சந்திக்க நேற்று 17 வயது சிறுமி வந்துள்ளார். அப்போது அந்த விடுதியில் இருந்த 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக விடுதி கட்டிடத்திற்குள் இழுத்து சென்றுள்ளனர்.

தடுக்க வந்த சிறுமியின் நண்பனையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அந்த சிறுமியை ஒரு மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதை மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அவ்வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் வருவதை கண்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் உள்பட 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் அரசு கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.