மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
1 min read
Rs 12,000 crore interest-free loans to states; Nirmala Sitharaman announcement
12/10/2020
மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டி இல்லாத கடனாக வழங்கப்படுவதாகவும், கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
ரூ.12 ஆயிரம் கோடி
கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. தற்போது விநியோக தடைகள் ஓரளவு குறைந்துவிட்டன. ஆனால் நுகர்வோர் தேவைக்கு இன்னும் ஊக்கமளிக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படும். கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.
அரசு ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால் பொருட்களின் தேவை அதிகரித்து, வியாபாரம் ஊக்கம் பெறும்.
ஊழியர்களுக்கு முன்பணம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணமாக இந்தாண்டு வழங்கப்படும். ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் பணத்தை நிதியாண்டின் இறுதி வரை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.10 ஆயிரம் முன்பணம் மாதந்தோறும் ரூ.ஆயிரம் என்ற அடிப்படையில் 10 மாதங்களில் பிடித்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.