டெலிவிஷன் தொடர்களில் தவறான உறவுகள் பற்றிய கதை; ஐகோர்ட்டு வேதனை
1 min read
The story of abusive relationships in television series; High Court Judges tormented
3/11/2020
டெலிவிஷன் தொடர்களில் தவறான உறவுகள் கதைதான் வருகிறது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
வழக்கு
“இரண்டாம் குத்து” என்ற படத்தின் போஸ்டர் விளம்பரத்தை நீக்கக்கோரி பெருமாள் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கிருபாகரன், புகழேந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று ( செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது “இரண்டாம் குத்து” படத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘அந்தக்கால படங்கள் குடும்ப உறவுகளையும், நாட்டு பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தது. தற்போது ஆபாசத்தையும், வன்முறையையும் பரப்புவதாக இருக்கிறது. விளம்பரத்திற்காக இரட்டை அர்த்தம், தகாத வார்த்தை வசனங்களை வைக்கின்றனர்.’’ என்றனர்.
மேலும், இது தொடர்பாக பேஸ்புக், யூடியூப் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
டெலிவிஷன் தொடர்
அத்துடன் ‘‘டி.வி. நெடுந்தொடர்களுக்கு தணிக்கை குழு ஏதும் கிடையாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘‘பெரும்பாலான டி.வி. நெடுந்தொடர்கள் குற்றச் செயலுக்கு காரணமாக அமைகின்றன. தவறான உறவுகள் குறித்தே பல கதைகள் அமைகின்றன’’ என்ற கருத்தையும் வெளிப்படுத்தினர்.