துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாக வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல்
1 min read
Threat to Anna University Vice Chancellor Surappa
6/11/2020
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக இருப்பவர் சூரப்பா. இவர்தான் அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தை மத்தய அரசு எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியானது.
இதற்கு அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்க தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரினார்.
மிரட்டல்
இந்த நிலைியல் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்துள்ளது.
அந்தக் கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.