கேரளா, மராட்டியத்தில் கொரோனா குறைந்து வருகிறது
1 min read
Corona is declining in Kerala, Maratha
8/11/2020
கேரளா, மராட்டியத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. இன்று மட்டும் 5,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஆனால் டெல்லி, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வருகிறது.
கேரளாவில் இன்று புதிதாக 5,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து110 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவலல் இன்று மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,692 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,853 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,02,477 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 81,823 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மராட்டியம்
இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 5 ஆயிரத்து 92 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 19 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 232 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 77 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.
அந்த மாநிலத்தில் இன்று மட்டும்110 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் . இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் இன்று மட்டும் 2,237 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 967 ஆக உள்ளது.
ஆந்திராவில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவளின் எண்ணிக்கை 6,791 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த மாநிலம் முழுவதும் 21,403 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,14,773 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.