June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பெண் பலி

1 min read

Truck collides with motorcycle in Tirunelveli; Woman killed

7/-11/-2020

திருநெல்வேலியில் கணவருடன் சென்ற பெண் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(57). கோவில் பூசாரி. இவரது மனைவி சாந்தி (54) கணவன் மனைவி இருவரும் இன்று மதியம் நெல்லை டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரசியலோடு ஏற்ற சென்ற லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் கணவன் மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாந்தி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.