June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிவைப்பு

1 min read

Postponement of opening of schools in Tamil Nadu

20/11/ 2020/
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள்

கொரோனா பரவல் காரணமாக நாடு முழவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பள்ளிக்கூடங்களில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது.

ஊரடங்கிளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

16-ந் தேதி

இந்த நிலையில் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு சில அரசியில் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ச அரசு உத்தரவிட்டது. பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 9-ந்தேதி அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

தள்ளி வைப்பு

இந்த நிலையில் தமிழக அரசு இன்று காலை( வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது. வருகிற 16-ந்தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படாது. சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.