அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; முதல் அமைச்சருக்கு நன்றி
1 min read
Reservation for government school students; Thanks to the First Minister
12/11/2020
மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.
7.5 சதவீதம்
தற்போது மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவப்படிப்பில் சேர முடியும். அதிலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.
இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். உள்பட மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்கும் சென்றனர். ஆனால் கோர்ட்டு திட்டவட்டமாக நீட் தேர்வு கட்டாயம் என்று உறுதியாக கூறிவிட்டது.
இப்போது அரசுப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வர முயற்சி மேற்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ப.செ.க.கணபதி அரசு மேனிலைப் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் உள்பட பலர் பாராட்டி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பள்ளிக் கல்வி இயக்குனர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.