June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,112 people in Tamil Nadu today

12/11/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது. ஒவ்வொரு நாள் கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( வியாழக்கிழமை) மட்டும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,52,521 ஆக உயர்ந்துள்ளது.

25 பேர் சாவு

தமிழ் நாட்டில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 25 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,440 ஆகும்.

தமிழகத்தில் இன்று 2,347 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,22,686 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 18,395 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்…

சென்னையில் மட்டும் இன்று 565 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை மொத்தம் 2,07,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,08,63,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 77,356 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.