June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

1 min read

10 killed as van overturns in Madhya Pradesh

14/11/2020

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேன் கவிழ்ந்தது

மத்தியபிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஷியோபூர் மாவட்டம் விஜய்பூர் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் அதிகமானோர் ஒருவேனில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற கார் சிவபுரி மாவட்டம் போஹ்ரி-கக்ரா சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

10 பேர் பலி

இதுபற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனாலும், இந்த கோரவிபத்தில் 10 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.