தமிழகத்தில் இன்று 1,939 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,939 people in Tamil Nadu today
14/11/2020
தமிழகத்தில் இன்று 1,939 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பரவல் உள்ளது.
கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 1,939 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 17 ஆயிரத்து 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 2,572 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சோ்த்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் பலி
தமிழகத்தில் இன்று மட்டும் 14 பேர் கொரோானாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வருபவர்களின் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் – 68
செங்கல்பட்டு – 901
சென்னை – 5,469
கோவை – 971
கடலூர் – 222
தர்மபுரி – 204
திண்டுக்கல் – 150
ஈரோடு – 725
கள்ளக்குறிச்சி – 126
காஞ்சிபுரம் – 530
கன்னியாகுமரி – 246
கரூர் – 314
கிருஷ்ணகிரி – 351
மதுரை – 406
நாகை – 349
நாமக்கல் – 424
நீலகிரி – 218
பெரம்பலூர் – 50
புதுக்கோட்டை – 192
ராமநாதபுரம் – 62
ராணிப்பேட்டை – 235
சேலம் – 872
சிவகங்கை – 152
தென்காசி – 80
தஞ்சாவூர் – 257
தேனி – 79
திருப்பத்தூர் – 130
திருவள்ளூர் – 974
திருவண்ணாமலை – 387
திருவாரூர் – 241
தூத்துக்குடி – 297
திருநெல்வேலி – 267
திருப்பூர் – 889
திருச்சி – 305
வேலூர் – 251
விழுப்புரம் – 254
விருதுநகர் – 98
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 2
உள்நாடு – 0
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0
மொத்தம் – 17,748