விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக 1027 வழக்குகள் பதிவு
1 min read
1027 cases of illegal exploding of firecrackers were registered
15/10/2020
தமிழகத்தில் தீபாவளியையொட்டி விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக 1027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகை
தீபாவளியை யொட்டி பட்டாசுகள் வெடிக்க அரசு சில கட்டுப்பாடுகள் விதித்து இருந்தன. இந்த விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு தீபாவளி அன்று போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகம் முழுவதும் மொத்தம் 1027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 428 வழக்குகளும் மதுரை மாவட்டத்தில் 154 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.