June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,819 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,819 people in Tamil Nadu today

15/11/2020

தமிழகத்தில் இன்று புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 1,819 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

12 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 12 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11,478 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 2,520 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,27,752-ல் இருந்து 7,30,272 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 18,441 பேர் கொரோனாவுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 65,053 மாதிரிகளும் இதுவரை 1,10,72,885 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 64,213 பேருக்கும், இதுவரை 1,07,91,896 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.