June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுரை ஜவுளிக்கடையில் தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலி

1 min read

Madurai textile shop fire; 2 firefighters killed

14/11/2020

மதுரையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியின்போது 2 தீயணைப்பு படை வீரர்கள் இறந்துள்ளனர்.

தீ விபத்து

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் ஆனது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் சாவு

அப்போது, அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

ஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், தீப்பிடித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உதவி

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்த வீரர்கள் கல்யாணகுமார், சின்ன கருப்பு ஆகியோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.