நெல்லை, தென்காசி உள்பட 8 வட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
1 min read
8 districts including Nellai and Tenkasi It may rain heavily
17/11/2020
தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதான சென்னை வானிலை மையும் அறிவித்துள்ளது. இதுபற்றி கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும்.
மீனவர்களுக்கு…
குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.