June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தனியார் பள்ளிகளில் 35 சதவீத கட்டணத்தை வசூலிக்க ஐகோர்ட்டு அனுமதி

1 min read

The High Court allowed private schools to charge 35 percent of the fees

18/11/2020

தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி 28-ந்தேதிக்குள் வசூலித்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

தனியார் பள்ளிகள்

சென்னை ஐகோர்ட்டு
கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று( புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் தனியார் பள்ளிகள் வசூலித்து கொள்ளலாம்.” என்றார்.

மேலும், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

முழு கட்டணத்தை வசூலித்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து வருகிற 27-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.