July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5 ஆயிரம் அபராதம்

1 min read

5 thousand fine for playing online rummy

20/11/2020

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இனி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்டம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதற்கு எந்த தடைகளும் இல்லாமல் இருந்தது. ஆன்லைன் சூதாாட்டத்தில் இளைஞர்கள் விளையாடி பணத்தை விரையமாக்கி வருகின்றனர்.
இதனால் சில இளைஞர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
அவசர சட்டம்

எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் அவரச சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ( வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10ஆயிரம் அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.