தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா ; 2,173 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 1,688 people in Tamil Nadu today; 2,173 discharged
20/11/2020
தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா இருப்பது கண்டியறிப்பட்டுள்ளது. 2,173 பேர் கொரோனாவில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா கடந்த ஒரு வாரமாக 2 ஆயிரத்துக்கும் கீழாகத்தான் பதிவாகிறது. தமிழகத்தில் இன்றயை கொரோனா நிலவத்த்தை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) 1,688 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 66 ஆயிரத்து 677 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து11 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 34-வது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
18 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவர்களில் 7 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,568 ஆக உயாந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,173 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,41,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 13,404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 68,033 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,14,01,239 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகல்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.