July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,655 people in Tamil Nadu today

22/11/2020

தமிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து69 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து12 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 36-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

19 பேர் பலி

தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 11 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் கொரோனாவுக்க இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,605 ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,010 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 12,542 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசோதனை

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,809 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,15,41,238 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.