June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகம்-ஆந்திரா இடையே 25-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து

1 min read

Bus service between Tamil Nadu and Andhra Pradesh from 25th

23/11/2020

தமிழகம்-ஆந்திரா இடையே 25-ந் தேதி முதல் மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளன.

பஸ் போக்குவரத்து

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன. அதன்பின் மக்களின் வாழ்வாதாரத்துக்காக தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தளர்வுகள் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கும் வகையில் பொதுப்போக்குவரத்து சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.

ஆந்திராவுக்கு…

இதேபோல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து சேவையை தொடங்கவேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து வருகிற 25-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையை தொடங்க அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகம்-ஆந்திரா இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.