“நிவர்” புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும்
1 min read
Storm Nivar will make landfall from midnight today until early tomorrow morning
25/11/2020
வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் “நிவர்” புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“நிவர்” புயல்
வங்கக்கடலில் உருவான தீவிர புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டு உள்ளது. அந்தப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்று (புதன்கிழமை) இரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் “நிவர்” புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி “நிவர்” புயலானது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது .
முன்னதாக நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
ராணுவம் தயார்
பதிவு: நவம்பர் 25, 2020 10:42 AM
புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று சுமார் 145 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
‘நிவர்’ புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைக் குழு தயார் நிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.