June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் 39 பேருக்கு கொரோனா: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

1 min read

Corona for 39 people in Sabarimala: Increased restrictions

28/11/2020

சபரிமலையில் 39 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல விளக்கு கால பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக அங்கு குறைந்த அளவில்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன் அனுமதி பெற்றபின்னர்தான் அங்கு செல்ல முடியும்.

கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அங்கு 39 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

கோயில் ஊழியர்கள் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஏற்கனவே சபரி மலை

கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.