நிரவி புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரம் வழங்க கோரிக்கை
1 min read
Request to provide relief to boats affected by Niravi storm
2/12/2020
நிரவி புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு 90 சதவீத மானியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில்
தேசிய செயல் தலைவரும் தேசிய செய்தி தொடர்பாளருமமான டாக்டர் நாஞ்சில் P.ரவி.
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புயல்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 20.11.2020 முதல் நிவர் புயல் காரணமாக
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளும்
சுமார் 4000 க்கு மேற்பட்ட பைப்பர் படகுகள் மற்றும் இரண்டு இன்ஜின் செவுள்வலை படகுகளும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவுள்வலை இரண்டு இஞ்சின் படகுகளையும் மற்றும் பைப்பர் படகுகளையும் வலைகளையும் மீனவர்கள் கிரேன் மூலம் 800 க்கு மேற்பட்ட பைப்பர் படகுகளை மீனவர்கள் தூக்கி கரையில் வைத்ததில் 50க்கு அதிகமான பைப்பர் படகுகளும், 25க்கு மேற்ப்பட்ட ஐஸ் பாக்ஸ்களும் உடைந்துவிட்டது. மேலும் 800க்கு மேற்பட்ட பைப்பர் படகுகளை கரைக்கு ஏற்றி வைக்க தலா ரூ.2000 வரை மீனவர்கள் கிரேனுக்கு வாடகை கொடுத்தனர் .மீண்டும் கடலில் இறக்கவும் தலா ரூ.2000 செலவு செய்ய வேண்டிய நிலையில் மீனவர் உள்ளனர்.
கரையில் ஏற்ற இடம் இல்லாத காரணத்தால் கடலில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான பைப்பர் படகுகளில் சுமார் 25க்கு மேற்ப்பட்ட பைப்பர் படகுகள் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது குறிப்பிட்டதக்கது.
மூழ்கி கிடக்கின்றன
மேலும் ஆழ்கடல் விசைபடகுகள், மற்றும் குறைந்த ததூரம் மீன்பிடிக்க செல்லும் விசைபடகுகள் என சுமார் 1500 படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளில், தற்போது வரைக்கும் சுமார் 25க்கு மேற்ப்பட்ட விசைபடகுகள் நிவர் புயலின் வேகத்தால் படகுகள் ஒன்றுடன் ஒன்று இடித்தும். ராட்சத அலைகளால் படகுகளுக்கு தண்ணீர் புகுந்து காசிமேடு துறைமுகத்தில் டீசல் வலை மற்றும் இதர மீன்பிடி உபகரணங்ளுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மூழ்கிகிடக்கின்றன.
மற்றும் பல மீனவர்களின் படகுகள் என சுமார் 25க்கு மேற்ப்பட்ட விசைபடகுகள் தற்போது வரைகடலில் மூழ்கி கிடக்கின்றன. பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்
மேலும் இரண்டு இஞ்ஜின் ஆழ்கடல் செவுள் வலை பைப்பர் படகுகள் மற்றும் பைப்பர் படகுகள் ஆழ்கடல் விசைபடகுகள் மற்றும் விசைபடகுகள் என குறைந்தபட்சம் தற்போது வரை சுமார் 15 கோடி வரை இந்த நிவர் புயலால் காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் மீனவர்களுக்கு இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மானியம்
ஆகவே தமிழக முதல்வர் அவர்களும், மீன்வளத்துறை அமைச்சர் அவர்களும் போர்கால அடிப்படையில் ஆய்வு செய்ய குழு அமைத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடாக புதிய படகுகள் கட்ட ஆகும் தொகையில் 90 சதவீதம் அரசு மானியமும், 10 சதவீதம் வாங்கி கடனும் வழங்கி புதிய படகுகள் கட்ட அரசு உதவிட வேண்டும். மற்றும் நிவர் புயலால் காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் பாதிக்கப்பட்ட மீன் செட்டுகள், கருவாடுகள், கருவாடு செட்டுகள், மீன்வியாபாரிகள், சில்லரை மீன் விற்பனை செய்யும் மீனவ மகளிர்களுக்கும், இதர தொழிலாளர் மற்றும் விசைபடகு, பைப்பர் படகுகளில் தொழில் இழந்து நிற்க்கும் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரிய இழப்பீடாக தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையாக தமிழக அரசுக்கு வைக்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.