இந்தியாவில் ஒரே நாளில் 35,551 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 35,551 people one day in India
3/12/2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 35,551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனரில் இருந்து குணம் அடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொரேனாா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவல் கொரோனா பரவல் பற்ற மத்திய சுகாதார அமைச்சகம் இன்று( வியாழக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 95,34,965 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்ற ஒரே நாளில் 35,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 526 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,73,373 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 40,726 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 4,22,943 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரேனாவுக்கு
இறந்தவர்களின் எண்ணிக்கை 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.