June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

1 min read

Re-opening of water from Sembarambakkam Lake

3/12/2020

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மீண்டும் தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி 24 அடி உயரம் கொண்டது. கடந்த வாரம் மழையின்போது ஏரி நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரி நீர் செல்லும் வழிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர் வரத்து குறையவே, நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது.

மீண்டும்…

இந்த நிலையில், ஏரிக்கு தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இதனால், இன்று ( வியாழக்கிழமை) காலை ஏரியின் நீர்மட்டம் 22.15 அடியாக இருந்தது. ஏரிக்கு நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், இன்று பகல் 12 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு நீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.