திரண்டு வந்த மேகம் – ஏமாற்றம் அடைந்த தென் மாவட்டங்கள்
1 min read
Accumulated Cloud – Disappointed Southern Districts
4/12/2020
தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எதிர்ப்பர்க்கப்பட்ட நிலையில் மேகம் திரண்டு வந்து மழை தராமல் ஏமாற்றியது.
புரெவி புயல்
இந்த தென் மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்தது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாட்டங்களில் போதிய இல்லை.
தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஆற்றுப்பகுதிகளில் மட்டும் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி பல இடங்களில் போதுமான செழிப்பு இல்லை. பல குளங்கள் இன்னும் நிரம்பவில்லை. இந்த புரெவி புயல் தென் மாவட்டங்களில் பாதிப்பை எற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் இதனால் மழை பொழிவு இருக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர்.
இலங்கையை கடக்கும்போது புயலின் வேகம் குறைந்தது. ஆனாலும் தென் மாவட்ட மக்கள் மழையை எதிர்பார்த்தனர்.
ஏமாற்றம்
ஆனால் எதிர்பார்த்தபடி மழை இல்லை. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மேக மூட்டம் மட்டும் நிறைந்து இருந்தது. மழை சிறிது கூட பெய்யவில்லை.
அதே நேரம் நிரவி புயலால் மழை பொழிவு கண்ட நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, சென்னை் போன்ற ஊர்களில் தற்போதும் புரெவி புயலால் நல்ல மழை பெய்கிறது.
சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அளவுக்கு மழை பெய்துள்ளது.